முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் கடந்த 3 மாதங்களாக திரிணா முல் காங்கிரஸ் ஆளும் மேற்குவங்க மாநில மக் களை டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிரட்டி வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மருத்துவமனைகள் டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழி யும் நிலையில், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் கொல் கத்தா மாவட்டங்கள் டெங்கு பரவல் மையங்களாக உரு குலைந்துள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள் ளது. செவ்வாயன்று காலை நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் (2022) 66,000 பேர் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை தொடர்ந்து மறைப்பு
பாதிப்பு எண்ணிக்கை தர வுடன் அறிக்கையாக கூறப் பட்டாலும், பலி எண்ணிக்கை யை மேற்கு வங்க அரசு தொடர்ந்து மறைத்து வரு கிறது. இந்த ஆண்டில் 70 பேர் மட்டுமே டெங்கு காய்ச்ச லால் உயிரிழந்ததாக அம் மாநில அரசு கூறுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இது தவறானது என்றும், பலி எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. டெங்கு பலி எண்ணிக்கையை மேற்கு வங்க அரசு மறைப்பது தொடர்பாக மாநிலம் முழு வதும் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பி டத்தக்கது.